Thursday, January 12, 2012

சொர்கத்தை நோக்கி...

ஓ நாணல்களே!
ஒரு முறை தலையாட்டுங்கள்
நான் கவிதை எழுதப் போகிறேன்... 
நாணல்  தலையசைக்க, கையில் கவிதை!

ஓ மேகங்களே!
ஒரு முறை தூறல் போடுங்கள்
நான் நீராட போகிறேன்...
மேகம் மழை தூவ, நீரோடு தேகம்!

ஓ குயில்களே!
ஒரு முறை கூவுங்கள்  
நான் பாட போகிறேன்...
குயில் மகள் கூவ, குட்டி ராகம் என் நாவில்!

ஓ இளங்காற்றே!
ஒரு முறை வீசு
நான் ஓய்வெடுக்க போகிறேன்...
இளமகன் இளைப்பாற, இளங்காற்றின் தாலாட்டு!

ஓ செந்தமிழே!
ஒரு முறை கவிதை சொல்
நான் மகிழ்ச்சியோடு இருக்கிறேன்...
செந்தமிழ் கவி பாட, சொர்கத்தை நோக்கி நான்...!

No comments:

Post a Comment