தனிமை சுகம்,
தனிமை பலம்,
தனிமை ஞானம்.
நீ உன்னையே மறக்க வேண்டுமா?
உலகையே ஒரு புள்ளியாக்கணுமா?
தனிமையில் இரு.
மரணத்தை விலைக்கு வாங்கி,
ஜனனத்திடம் விற்கலாம்.,
நாம் மனிதன் என்பதன் காரணம் அறியலாம்,
நாம் மனிதன் என்பதன் காரணம் அறியலாம்,
ஆழ் கடல் ஆழம் முதல்
அண்டத்தின் தோற்றம் வரை
யோசிக்க வேண்டுமா?
தனிமையில் இரு.
காதலில் குதித்து கானம் பாட,
காதலை வெறுத்து கண்ணீர் சிந்த,
தனிமையில் இரு.
தாயிடம் மகிழ்வாய் பேச வேண்டுமா?
தந்தையுடன் ஓடி ஆடி விளையாடனுமா?
தனிமையில் இரு.
ஆம்...
தனிமை சுகம்,
தனிமை பலம்,
தனிமை ஞானம்.
நீ சோதனைகளையே சிந்திக்க சோதனைகள் போதும்,
காதலையே சிந்திக்க பெண்கள் போதும்,
மரணத்தையே சிந்திக்க மரணம் போதும்,
மகிழ்ச்சியை சிந்திக்க வெற்றிகள் போதும்,
உன்னை நீ நினைக்க,
உன்னை நீ நேசிக்க,
உன்னை நீ அறிய,
தனிமையில் இரு.
உண்மையாய் சொல்கிறேன்...
தனிமை சுகம்,
தனிமை பலம்,
தனிமை ஞானம்.
வாருங்கள் சிறிது நேரம் தனிமையில் இருப்போம்...
No comments:
Post a Comment