Thursday, February 2, 2012

புரியவில்லை

புரியத்தான் எழுதுகிறேன்
புரியாமல்
நாம் புரிந்து புரிந்து  
அறிந்ததெல்லாம்
இன்று நமக்கு ஏனோ  
புரியாமலேயே போய்விட்டது

நாம் புரியாது என்று  
புறந்தள்ளி வைத்ததுதான் இன்று
புரிய புரிய தொடருகிறது...
நாம் புரிந்து மறந்தவையும்
மறந்து பின் புரிந்தவையும்
நம்முள் அடங்கும்
இதை புரிந்துதான் கூறுகிறேன்.
புரியாமல் போனால்
                             புரிய முயற்சி செய்
புரிந்து விட்டால் மறக்க முயற்சி செய்

நான் மறக்கச் சொன்னது இந்த சங்கதியைத்தான்
இந்த சந்தர்ப்பவாதியை அல்ல...

நானும் கனவும்

நான் உறங்கும்போது விழித்திருந்த சமயம்,
நான் நடந்து வந்த பாதையின் சுவடுகளில் ஏதோ ஒரு சுதந்திரம்!
அது இஷ்டத்திற்கு அங்கும் இங்கும் ஆட்டம் போட்டது...
நான் உற்று நோக்கிய திசையெல்லாம் பனித்துகள்கள்.,
வாணுக்கும் மண்ணுக்கும் பாலம் அமைத்து கொண்டிருந்தது.
என் செவிகளில் நுழைந்தது கானம்,
அதை என்னால் ரசிக்கத்தான் முடிந்தது,  
அதைப் பாட எனக்கு ஞானமில்லை.
அங்கு நல்ல நறுமணம் வீசியதால் என் மீது கூட பாரிஜாத வாசனை!
அங்கு நான் பேசியதை விட அந்த நறுமணத்தைத்தான்  அதிகம் நுகர்ந்தேன்...
நானும் மனிதனாயிற்றே பேசத் துவங்கினேன்...
என்ன ஆச்சர்யம்!!!
அழகுத் தமிழில்!!!
அசரும்படி பேசினேன்
அதில்
அதிசயம் என்ன தெரியுமா???
நான் பேசியது உண்மையை மட்டும் தான்!!!  
அது என்ன இடமோ தெரியவில்லை,
அங்கு உழைக்கவே வழி இல்லை,
ஆனால் ஓசிச் சோறு சுடச் சுட...
அருமையான சாம்பாரு,
அதுகூடவே இரசமும் சோறு,
அப்பளம், கூட்டு, பொரியல் கூட
அல்வா இலையில் நெய்யில் ஆட...
பாசிப்பருப்பு பாயாசம்,
ஏனோ எனக்கு ஒன்னும் புரியவில்லை,
உண்ட ஏப்பம் மட்டும் இன்னும் அடங்கவில்லை.,


 
யோவ்....                              
எந்திரி...எந்திரி....

 








 


 


 
பார்க் பூட்ட நேரமாயிடுச்சு...                        


ச்சே! பாவி மகன்
தூக்கத்தில் கூட நிம்மதியாயிருக்க விடமாட்டிங்கறான்...




ஆசை

தாயோடு விளையாடி அவள் சேலையில் ஒளிந்து கொள்ள.,
நெய்யூற்றி சோறு பிசைந்து நிலாச்சோறு நான் உன்ன 
                                                                                                   ஆசைப்படுகிறேன்...

நேசம் நிறைந்த நட்போடு நாளெல்லாம் ஊர் சுற்ற ...

அணுவுக்குள் அணுவைத் தேடி ஆராய்ச்சி மேற்கொள்ள 
                                                                              ஆசைப்படுகிறேன்...

குற்றாலம் அருவியிலே தினமும் நீராட.,
நீரோடை மேலே என் பாவங்கள் கரைந்தோட ஆசைப்படுகிறேன்....


செங்கற்கள் துகள் அள்ளி பல் துலக்கி வாய் கழுவ.,
சேற்று வயல் நடந்து நான் நாற்று நட ஆசைப்படுகிறேன்...

நடுங்கும் குளிரில் அவளுடன் நெருப்பை கட்டி அணைக்க.,
சிறுவர் குழாம் நானும் பம்பரம் சுற்ற ஆசைப்படுகிறேன்...

ஆடுகள் பல ஓட்டி ஹேய் ஹேய் என்று சொல்ல.,
அழகாய் அதனுடன் பழைய சோறு நான் தின்ன
                                                                                  ஆசைப்படுகிறேன்...

தங்கைக்கு சடை பின்னி காதோரம் பூ வைக்க.,
நான் தாயோடு மடி சாய்ந்து கண்ணீர் விட ஆசைப்படுகிறேன்...

காதலோடு நட்பிலும் பேதமின்றி நடந்து கொள்ள., 
காதலோடு நட்புக்கும் எடுத்துக்காட்டாய் நான் இருக்க...
                                                                                             ஆசைப்படுகிறேன்...