Sunday, August 12, 2012

நண்பேன்டா...



மழையை கேட்டேன்
மண் என்றது...

மரத்தை கேட்டேன் 
காற்று என்றது... 

இரவைக்  கேட்டேன் 
நிலவு என்றது...

இலையைக் கேட்டேன் 
தண்டு என்றது... 

கடலைக்  கேட்டேன் 
அலை என்றது... 

கரும்பைக் கேட்டேன் 
இனிப்பு என்றது... 

அப்படி என்ன உங்களுக்குள் என்றேன்.,
"நட்பு" என்றன... 

ஆமாம், எங்களை கேட்கிறாயே 
உனக்கு யார் என்றன... 

உலகமே இருக்கிறது என்றேன்...

No comments:

Post a Comment