Sunday, August 12, 2012

என் தேசம் உயர்ந்துவிடும்!


என் தேசம் உயர்ந்துவிடும் 
ஒவ்வொரு இளைஞனும் 
உழைக்க தொடங்கிவிட்டான் 
என் தேசம் உயர்ந்துவிடும்.

பகலில் பள்ளிக்கூடம் சென்று 
பாடப்புத்தகம் புரட்டுபவன் 
இரவில் எச்சில் இலை எடுத்து 
வியர்வை சிந்தி உழைக்கிறானே 
அதனால் சொல்கிறேன் 
என் தேசம் உயர்ந்துவிடும்.

பெண்களை வர்ணித்தே பொழுதை போக்கியவன் 
இன்று சமுதாயத்தை எழுதுகிறானே 
அதனால் சொல்கிறேன் 
என் தேசம் உயர்ந்துவிடும்.

பணத்தை மட்டும் தேடியவர்கள் 
இன்று படிக்கவும் சொல்கிறார்களே 
அதனால் சொல்கிறேன் 
என் தேசம் உயர்ந்துவிடும்.

சினிமா நடிகனைப் பார்த்து 
என் தலைவன் வழி நடப்பேன் என்றவன்
சிறகை விரித்து சிந்தித்து 
விஞ்ஞானியை போல் வருவேன் என்றானே 
அதனால் சொல்கிறேன் 
என் தேசம் உயர்ந்துவிடும்.

No comments:

Post a Comment