Sunday, August 12, 2012

கருப்பு ராணி





அதோ குயில்...
கருப்பு ராணி!!!
குரலிலே போதை தரும்
 போதை பொருளே!
அபீனைப் போல என்ன
 இனிமை உன் குரல்! 
கஞ்ஜாவினை உறிஞ்சிய போது கூட
 நான் உணரவில்லை
 உன் குரல் போல் சுகத்தை...
நான் புகையைத்தான் உள்ளிழுத்து   
வெளிவிட்டேன் எனக்கு சிறு நிம்மதி... 
நீ காற்றை உள்ளிழுத்து 
கானமாக வெளிவிடுகிறாயே 
அதில் தான் உன் நிம்மதியோ?
எத்தனையோ பெண்களை
 போல் குரலினிலே
என்று வர்ணித்தேன்...
உன்னை வர்ணிக்க
 இன்று தான் எண்ணம் வந்தது. 
நான் கூட கருப்பு என்று
 ஏங்கிய நாட்கள் உண்டு...
உனக்கு அந்த தாழ்வு மனப்பான்மையே கிடையாதா???
ஆண்டவன் என்ன
 அரசு ஊழியன் ஆகிவிட்டானா? 
உன்னிடம் மட்டும் லஞ்சம் வாங்கி
 குரலை அழகாய் கொடுத்துவிட்டானே!
யாரிடம் பயிற்சி எடுத்தாய்?
உன் பாடசாலை எங்கு இருக்கிறது? 
ராகங்களை சமைத்தது நீதானா?
பாவி 
கேட்டு கேட்டு தொண்டை வற்றி 
என்னால் பேசவே முடியவில்லை., 

 நீ மட்டும் கூவிக்  கொண்டே இருக்கிறாயே?

ஓஹோ...

பதில் சொல்கிறாயா? 
மன்னித்து விடு...
என்னால் புலம்பத்தான் முடியும் 
புரிந்து கொள்ள முடியாது 
ஏன் என கேட்கிறாயா? 
ஆம்., 
நான் மனிதன்...

No comments:

Post a Comment