கடவுளே!
உனக்கு நிறமுண்டா?
படங்களில் கண்டதால் சந்தேகம்
இறைவனே!
உனக்கு உருவமுண்டா?
சிலைகளை கண்டதால் சந்தேகம்
பரம்பொருளே!
உனக்கு பயமுண்டா?
திரைப்படங்களை கண்டதால் சந்தேகம்
ஆண்டவனே!
நீ உண்மையில் உண்டா?
மூடபழக்கங்களை கண்டதால் சந்தேகம்
ஆயினும் "உன்னையே சிந்திக்கிறேன்"...
No comments:
Post a Comment