Wednesday, January 5, 2011

வேண்டும் வரம்

இறைவா!
முள்ளில் படுக்கை கொடு
    சுகமாய் ஏற்கிறேன்.,
ஆணியில் காலணி கொடு
  ஆனந்தமாய் அணிகிறேன்.,
தாகம் தீர்க்க
சாக்கடை நீர் கொடு
    தவிற்காமல் குடிக்கிறேன்.,
பசித்த வயிறுக்கு
பச்சிலை கொடு
    மீதி வைக்காமல் உண்கிறேன்.,
சோகத்தை ஏற்று,
துயரத்தை அணிந்து, 
வஞ்சத்தை குடித்து,
பாதகம் உண்கிறேன்., 
"என் பாரதத்தை உயர்த்துவாயானால்"....

No comments:

Post a Comment