![]() |
நானும் காட்டு வாழ்வும் |
கானக் குயிலோ கிளையிலே
பசும்புல் மேயும் ஆட்டுக்குட்டி
அழகாய் அமர்ந்திடும் அருகிலே
ஆறு மணிக்கு அலாரமாய் கூறும்
சேவல் அவனது மணையாட்டி
அந்த கொக்கரிக்கும் கோழி
கண்ணாடி போன்ற நீர்போக்கு
கரையெல்லாம் செண்பகப்பூ
ஆங்காங்கே வேப்ப மரம்
அழகிய புன்னை மரம்
அமர்ந்த உடனே தூங்கச் சொல்லும்
அடர்ந்த தூங்கு மூஞ்சி மரம்
எப்போதும் நிசப்தம்
அவ்வப்போது மனித ராகம்
பேச நினைத்தால் குயில் கூவல்
பார்க்க நினைத்தால் மயில் ஆட்டம்
உறங்க நினைத்தால்
ஒய்யார தாலாட்டு
மண் வெட்டி கொண்டு மலையை சமப்படுத்த
உடன் வேண்டும் குதிரைகள்
உடைத்த பாறை உருட்டி தள்ள
தந்தம் கொண்ட இரு யானைகள்
உறங்கும் என்னை எழுப்பலாகாது
ஆனால் என்னை உறங்கச் சொல்லலாகாது
பசியும் வசியும் தொடர்ந்து கொண்டே வேண்டும்
உணவும் செழிப்பும்
இருந்த இடம் நிலைக்க வேண்டும்...
No comments:
Post a Comment