Saturday, January 8, 2011

நான் வசிக்க!

கோடை கால வெப்ப மேகம்
என்னை மட்டும் குளிர வைக்க
கொடைக்கானலிலே சிறு குடிசை
அறைகள் முழுவதும்
அழகிய ஓவியங்கள்
நான் சிரித்திட சிரிக்கவும்
அழுதிட தேற்றவும்
அழகாய் ஒரு பதுமை
பல் துலக்க கிளை காம்பு
பசி அகற்ற வடித்த சோறு
அடிக்கடி மாங்காய் குழம்பு
அவ்வப்போது தேங்காய் சோறு
அகம் மகிழ குயிலோசை
அடிக்கடி புல்லாங்குழல் இசை
ஒரே ஒரு வானொலி
முழுக்க முழுக்க கண்ணதாசன் பாடல்கள்
திரும்பும் இடமெல்லாம் புத்தகம்
அதில் வாழ்வை உணர்த்தும்
வானார்ந்த வரிகள்
மலைமேல் ஓர் ஆலயம்
அங்கு மாலை மட்டும் வழிபாடு
வறுமையை தேடி தேடி நோக வேண்டும்
அடிக்கடி அழ, அழகாய் காதல் தோல்வி
அனைவரும் பொறாமை கொள்ள
அடுக்கடுக்காய் வெற்றிகள்
வேப்ப மரம் குடை சாய
குறுக்கே ஒரு ஆறு
அதில் எபோதும் பச்சை பசேல் என
குளிர்ந்த நீரு
மின்சாரமில்லாமல் விளக்கெரிய
பழைய கால வழக்கில் தீ பந்தம்
விடிய விடிய எழுதி படித்து
அதிகாலை உறங்கிட வேண்டும்
வெண்பனி குளிர் காற்று
ஜன்னலை கடந்து
தேகம் தொட வேண்டும்.
நீல நிற கம்பளி கொண்டு
இழுத்து போர்த்தி
இன்னும் கொஞ்சம் தூங்க வேண்டும்
எழுந்திருங்கள்! என்று கூற பாவை
அவளை இழுத்தணைத்து
இதழ் முத்தம் கொடுத்து
திட்டு வாங்கி துயில் கலைக்க வேண்டும்
கண் திறந்தாள் காண ஒரு
அழகிய வதனம்
மஞ்சள் முகத்தின் புருவ கோட்டிடையில்
பொட்டு வைத்த பொன் முகம்
எழுந்த உடன் படிக்க ஓரிரு வரியில்
என் தமிழ் வாசகம்
தமிழை போற்றி பேசும்
பேச்சை கேட்டு கொண்டே
நாளிதழ் புரட்டல்
தண்ணீரில் நீராடிட
தாலேலோ பாடல்
தலை முதல் கால் வரை
சோப்புக்கட்டி தேய்க்கும் போது
இளையராஜா பாடல்
குளித்து தலை துவட்டி நடந்து வர
ரகுமான் பாடல்
துணியுடுத்தியவுடன் கை கழுவிட
தட்டில் குவளைச் சோறு
தொல்லையில் சுகமான தோழமை
அவ்வப்போது சிறு சிறு சண்டைகள்
எல்லோரும் ஒன்றாய்
தென்னந்தோப்பில் தேங்காய் பூ
திண்ணுகொண்டே அரட்டை
தமிழில் பாடி, எழுதும் போதே மரணம்....

1 comment: