Sunday, January 9, 2011

இவன்

பிறலாத பருவங்களில் 
தளராத முயற்சி 
இவன் இளமை!
கருக்களுக்கு 
கரு தந்த 
கர்ப்பக் கிரக கரு இவன்! 
மேகங்கள் மலர் தூவ 
மின்னலால் வாரி கொடுக்கும் 
மழை போன்றவன்! 
மழை என்பது இவன்
என்ற மூன்றெழுத்தின் குறைப்பு!
எரிகின்ற தீபத்தின் 
ஒளி இவன்!
எட்டாத வானத்தின் 
பூமி இவன்!
வாடாத மலர்களின் 
வாசனை இவன்!
தேடி கிடைக்காத 
நினைத்தால் தோன்றும் 
எல்லாம் இவன்!
இவன் என்னை போல்
உன்னை போல் 
மனிதன் தான்., 
அந்த இறைவனுக்கும் 
இவன் மேல் கொஞ்சம் 
அச்சம் தான்!
பொய்களில் இவன் மௌனம்,
நேர்மை இவன் வாதம்,
இரண்டே போதும் 
இவன் மனிதன் என்றிட!
துரோகத்தில் மறதி,
துரோகிக்கு மன்னிப்பு,
இவையே போதும் 
இவன் இறைவன் என்றிட! 
மேனி சிலிர்த்திட பெய்யும் மழையில் 
சுடர் விட்டெரியும் 
ஜோதி இவன்!
தவறினை தட்டி கேட்கும் 
உறவுக்கு உயிர் கொடுக்கும் 
ஜாதி இவன்!
வானம் உயரமாய் இருப்பது 
இவன் வதனம் காண! 
விடியாத இரவுகளில் 
மின்மினி இவன்!
முடியாத காரியத்தின் 
முன்னேற்றம் இவன்! 
இறைவன் என்பவன் இவன் தான் 
இவன் என்பதும் நான் தான்....

No comments:

Post a Comment